உள்ளூர் செய்திகள்
கல்வி அலுவலக உதவியாளர் சஸ்பெண்டு
ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் புகார் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் முருகேசன் (வயது 48).
இவர், தேர்வுநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர் ஊதிய உயர்வு சம்பந்தமான கோப்புகளை அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்வதில் மெத்தனம் காட்டினாராம்.
மேலும், லஞ்சம் எதிர்பார்த்ததாகவும், ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது.இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வி இயக்குனர் நடராஜன், தேற்றுமுருகேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.