உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அரசியலமைப்பு விதியை திருத்த தீர்மானம்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-03-27 06:28 GMT   |   Update On 2022-03-27 06:28 GMT
புதுவை சட்டசபையில் அரசியலமைப்பு விதியை திருத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 30-ந் தேதி புதுவை சட்டமன்ற  கூட்டத்தொடரில் அடுத்த 4 மாதங்களுக்கான அரசின் செலவின ஒப்புதலை பெறுவதோடு மக்கள் மற்றும் மாநில நலன் சார்ந்த சில பிரச்சினைகளை விவாதித்து தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும். 

புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும்  முடிவை கைவிட வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் புதுவை  யூனியன் பிரதேசத்தை மாநிலமாக கருதி 15-வது நிதிக்குழு வரம்புக்குள் புதுவையை கொண்டு வருவது அல்லது அக்குழுவின் பரிந்துரைக்கு இணையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். 

இந்த தீவிர பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனில் அரசியலமைப்பு விதி 280(3) யை திருத்த வேண்டும் என  தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும். 

இது, சாத்தியம் இல்லை என்றால் நிதிக் குழுவில் இருந்து கோவாவுக்கு எவ்வளவு நிதி வழங்கப்படுகிறதோ அதுபோல புதுவைக்கும் வழங்க வேண்டும் என்று தீர்மானம்  நிறைவேற்ற  வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News