உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை

Published On 2022-03-27 06:14 GMT   |   Update On 2022-03-27 06:14 GMT
முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

கோடைகாலம் தொடங்கியதில் இருந்து முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. வழக்கமாக ஜூன் மாத முதல்வாரத்தில் கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் இருபோக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெயில் வாட்டி வதக்கி வந்த நிலையில் முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பபு பகுதியில் மழை பெய்தது.

இதனால் அணைக்கு நீர்வரத்து 100 கனஅடியில் இருந்து 225 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 69.14 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 72 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 34.40 அடியாக உள்ளது .வரத்து இல்லை. 50 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உள்ளது வரத்துஇல்லை. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 5.2, தேக்கடி 35.2, உத்தமபாளையம் 10.4, போடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News