உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

திருக்காட்டுப்பள்ளியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-03-27 05:47 GMT   |   Update On 2022-03-27 05:47 GMT
திருக்காட்டுப்பள்ளியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்று பாலத்தில் இருந்து கடைவீதியில் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராம்பிரசாத், உதவி பொறியாளர் கலியராஜ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பஸ் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த டீக்கடை, ஆட்டோ, வேன் தொழிலாளர்கள் போட்டிருந்த கொட்டகைகள், மாதாகோவில் தெருவிற்கு செல்லும் வழியில் அமைந்திருந்த கிறிஸ்தவ கொடிமரம், சி.எஸ்.ஐ. ஆலய மணிக்கூண்டு, காம்பவுண்ட்சுவர் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர்.

ஆக்கிரமிப்புக்கள் அகற்றினால் மட்டும் போதாது. மீண்டும் ஆக்கிரமிப்புக்கள் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதேபோல பேரூராட்சி அலுவலக சாலை மற்றும் பழமார்நேரி சாலை பகுதியிலும் ஆக்கிமிப்புகள் அகற்றி தடையற்ற போக்குவரத்திற்கு வழி செய்யவேண்டும், மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News