உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை ஒம்சக்தி சேகர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.

அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல்

Published On 2022-03-26 09:40 GMT   |   Update On 2022-03-26 09:40 GMT
மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை ஓம்சக்தி சேகர் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை மேற்கு  மாநில அ.தி.மு.க.  சார்பில் பொதுமக்கள் நலனுக்காக நீர்- மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி பழம், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ், இணை செயலாளர் காசிநாதன், துணை தலைவர்கள் நந்தன், ஆனந்தன், துணை செயலாளர்கள் சதாசிவம், நாகமணி, கோவிந்தம்மாள், கணேசன்.

அணி செயலாளர்கள் மலை.செல்வராஜ், விக்னேஷ், லட்சுமணன், முருகன், புகழ்பாரி, மாசிலா குப்புசாமி, தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், கமல்தாஸ், கோபால், வேலவன், இருசப்பன், ராதாகிருஷ்ண உடையார், தம்பா, அறிவு, பிரபு, சேகர், சிவா, அந்தோணிராஜ், ரமேஷ் ஆசாரி, சுரேஷ்பாபு, சரவணன், ஜெய், வேலாயுதம், சேகர், கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் ஓம்சக்தி சேகர் பேசும்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவுப்படி மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

மேற்கு மாநிலம் உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் தாகம் தீர்க்க அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்படும் என்றார். 
Tags:    

Similar News