உள்ளூர் செய்திகள்
இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணிந்தர்ஜீத் பிட்டா சாமி தரிசனம்.

இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் சாமி தரிசனம்

Published On 2022-03-26 13:12 IST   |   Update On 2022-03-26 13:12:00 IST
வைத்தீஸ்வரன்கோயிலில் இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணிந்தர்ஜீத் பிட்டா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 

முன்னதாக சித்தாமிர்த தீர்த்தக்குளத்தில் புனிதநீர் தெளித்துக் கொண்டு, கற்பகவினாயகர், வைத்தியநாதர்சுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதியில் வழிபாடு செய்தார். கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசுதம்பிரான் சுவாமிகள் எம்.எஸ்.பிட்டாவை வரவேற்றார். 

எம்.எஸ்.பிட்டாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் வைத்தீஸ்வரன்கோயில் போலீசார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோயில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 பக்தர்களை ஆய்வு செய்து உள்ளே அனுப்பினர். தொடர்ந்து அவர் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News