உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பள்ளி மாணவி தற்கொலை

Published On 2022-03-26 06:29 GMT   |   Update On 2022-03-26 06:29 GMT
பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அக்சரா (வயது 13). இவர் காக்காவாடி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று அக்சரா நீண்ட நேரம் செல்போன் பார்த்துள்ளார். அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அக்சரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News