உள்ளூர் செய்திகள்
பைக்கிலிருந்து தவறி விழுந்த மீன் வியாபாரி பலி
பைக்கிலிருந்து மீன் வியாபாரி தவறி விழுந்து பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மகேந்திரன் (வயது 30) அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் ராமச்சந்திரன் மகன் அரவிந்தன் (23). இருவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் மீன் ஏற்றிக் கொண்டு செங்கிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது வடுகப்பட்டி கிராமம் விவசாய பண்ணை அருகே வந்த போது இருவரும் நிலை தடுமாறி மோட்டார் சைக்களிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மகேந்திரன் (வயது 30) அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் ராமச்சந்திரன் மகன் அரவிந்தன் (23). இருவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் மீன் ஏற்றிக் கொண்டு செங்கிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது வடுகப்பட்டி கிராமம் விவசாய பண்ணை அருகே வந்த போது இருவரும் நிலை தடுமாறி மோட்டார் சைக்களிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.