உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சாராயம் காய்ச்சியவர் கைது

Published On 2022-03-26 06:20 GMT   |   Update On 2022-03-26 06:20 GMT
சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் பெரிய வாய்க்கால் கரை அருகே உள்ள கொடிக்கால் பகுதியில் முசிறி மது விலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சாராயம் காய்ச்சிய தொட்டியம் சந்தப்பேட்டையை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த 100 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி தரையில் ஊற்றி அழித்தனர்.

Tags:    

Similar News