உள்ளூர் செய்திகள்
.

நாயை அடித்து கொன்ற 3 பேர் மீது வழக்கு

Published On 2022-03-25 15:45 IST   |   Update On 2022-03-25 15:45:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே நாயை அடித்து கொன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள இளவம்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது45), அதே பகுதியை சேர்ந்த உறவினரான காசிராஜன் (47).

இந்த நிலையில் கடந்த 23-&ந் தேதி சிவக்குமார் கொட்டகை அமைப்பதற்காக நிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் சுத்தம் செய்து முட்புதர்களுக்கு தீ வைத்துள்ளார். 

அப்போது ஏன் வன பகுதியில் தீ வைக்கின்றாய் என காசிராஜன், சிவக்குமாரை தட்டி கேட்டார். அப்போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்த போது சிவக்குமார் வளர்த்து வந்து வீட்டு நாய் காசிராஜனை மூன்று இடங்களில் கடித்தது. இதில் ஆத்திரமடைந்த காசிராஜன் அந்த நாயை அடித்து கொன்றார். 

இது குறித்து சிவக்குமாரின் மாமியார் லட்சுமி சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் காசிராஜன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வாராஜ், காசிராஜன் அவரது மனைவி குமாரி, தாயார் பழனியம்மாள் ஆகிய 3 பேர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார். அதே போல் வனபகுதியில் காசிராஜன் தீ வைத்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News