உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஸ் என்கிற ராஜா (வயது35). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 13 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ராஜா வீட்டில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.