உள்ளூர் செய்திகள்
பொது வேலை நிறுத்தத்திற்கு அரசு ஓய்வூதியர் சங்கம் ஆதரவு
பொது வேலை நிறுத்தத்திற்கு அரசு ஓய்வூதியர் சங்கம் ஆதரவு அளிப்பதாக மயிலாடுதுறையில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் மாநில தலைவர் சீதரன் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பழனிவேலு வரவேற்று பேசினார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார்.
அப்போது மாநில தலைவர் ஸ்ரீதரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள 48 மணி நேர பொதுவேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் நடைப்பெறும் போராட்டங்களில் ஓய்வூதியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்வார்கள்.
70 வயது நிறைவுப்பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 19-ல் வட்ட தலைநகரங்களிலும், மே-17 ல் மாவட்ட மையங்களிலும் தர்ணா போராட்டம், ஜூன்-21 ல் மாநில அளவில் பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில செயற்குழு கூட்டத்தின் நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினர் இளமாறன் நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் மாநில தலைவர் சீதரன் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பழனிவேலு வரவேற்று பேசினார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார்.
அப்போது மாநில தலைவர் ஸ்ரீதரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள 48 மணி நேர பொதுவேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் நடைப்பெறும் போராட்டங்களில் ஓய்வூதியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்வார்கள்.
70 வயது நிறைவுப்பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 19-ல் வட்ட தலைநகரங்களிலும், மே-17 ல் மாவட்ட மையங்களிலும் தர்ணா போராட்டம், ஜூன்-21 ல் மாநில அளவில் பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில செயற்குழு கூட்டத்தின் நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினர் இளமாறன் நன்றி கூறினார்.