உள்ளூர் செய்திகள்
விமான சேவை

ஐதராபாத், பெங்களூரு விமான சேவை- நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2022-03-25 02:42 GMT   |   Update On 2022-03-25 02:42 GMT
ஐதராபாத் - புதுச்சேரி- பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் தொடங்குகிறது. பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்கிறார்.
புதுச்சேரி:

புதுவை சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு சுற்றுலாத் துறையின் தொடர் முயற்சியினாலும், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் வலியுறுத்தலாலும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஆதரவாலும் ஐதராபாத்- புதுச்சேரி - பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் தொடங்கப்படுகிறது.

விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஐதராபாத்- புதுச்சேரி இடையே மீண்டும் தொடங்கப்படும் விமான சேவையில் புதுச்சேரிக்கு வரும் முதல் விமான பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூச்செண்டு மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுற்றுலாத்துறை செயலாளர் அருண் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதன்படி நண்பகல் 12.05 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மதியம் 1.30 மணிக்கு வருகிறது. புதுச்சேரியில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு 2.50 மணிக்கு பெங்களூருவை அடைகிறது. பெங்களூருவில் இருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு புதுச்சேரியை அடைகிறது. பின்னர் புதுச் சேரியில் இருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு 6.15 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News