உள்ளூர் செய்திகள்
நாயை அடித்து கொன்ற தொழிலாளி மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நாயை அடித்து கொன்ற தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் அருகே உள்ள வேலன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி புவனேஸ்வரி வயது (வயது40). நேற்று அருகாமையில் உள்ள நீப்பத்துறை காப்புக்காடு ஓரத்தில் கொட்டகை அமைப்பதில் புவனேஸ்வரி மற்றும் மகாலட்சுமி இருவருக்கும், காசிநாதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காசிநாதன், புவனேஸ்வரி வளர்த்து வந்த வளர்ப்பு நாயை அவர்கள் கண்முன்னே அடித்து கொன்றுள்ளார்.
இது குறித்து புவனேஸ்வரி சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நாயை அடித்து கொன்ற காசிநாதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.