உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உலக வனநாள் விழா கொண்டாடப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேன்கனிக் கோட்டை வனச்சரகம் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
வனசரக அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அன்பரசு, ஹரிஹரன், அழகு, விஸ்வநாத், ஆகியோர் கலந்து கொண்டு ஆலமரம், அரசு, அத்தி, வேம்பு, நாவல் போன்ற மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
தலைமை செவிலியர் சாந்தி மற்றும் வனவர்கள் விஜய் முருகன், ஆனந்த் மற்றும் வனக்காப்பாளர், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.