உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியனின் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலர்களுக்கும் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,
வளர்ச்சித்துறையின்மீது பிற துறைகளின் பணிகளைத் திணிப்பதை நிறுத்துவதோடு, திட்டப்பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார் கோவில், சீர்காழி, கொள்ளிடம், உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொன்டனர்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியனின் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலர்களுக்கும் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,
வளர்ச்சித்துறையின்மீது பிற துறைகளின் பணிகளைத் திணிப்பதை நிறுத்துவதோடு, திட்டப்பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார் கோவில், சீர்காழி, கொள்ளிடம், உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொன்டனர்.