உள்ளூர் செய்திகள்
.

காட்டிநாயனபள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளை

Published On 2022-03-23 15:57 IST   |   Update On 2022-03-23 15:57:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனபள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளை போனது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனபள்ளி வேலன்நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சாலினி (வயது30). இவர் கடந்த 21ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க சென்றுள்ளனர். 

பின்னர் வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. 

இது குறித்து மகாராஜாகடை போலீசில் புகார் கொடுத் தார். அந்த புகாரின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். 

அப்போது மர்ம நபர்கள் வீட்டை வீட்டு வெளியே செல் வதை நோட்ட மிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News