உள்ளூர் செய்திகள்
.

சூளகிரியில் பெண் மாயம்

Published On 2022-03-23 15:49 IST   |   Update On 2022-03-23 15:49:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெண் மாயமானார்.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள மேலுமலை சாமல்பள்ளம் பகுதியை  சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி தனபிரியா. 

இவர்கள் இருவரும் கடந்த 22ந்தேதி அன்று கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு டிப்பாட்மெண்ட் ஷோரூமிற்கு சென்றுள்ளனர். அங்கு திடீரென தனபிரியா மாயமானார். இதனால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து வசந்தகுமார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தனபிரியாவை தேடி வருகின்றனர்.

Similar News