உள்ளூர் செய்திகள்
.

காவேரிப்பட்டணம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

Published On 2022-03-22 15:47 IST   |   Update On 2022-03-22 15:47:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஆட்டுக்காரன் கொட்டாய் நரிமேட்டை சேர்ந்தவர் ரவி. இவர் டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று காலை ரவி செங்கல் பாரம் ஏற்ற காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரம் என்ற கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது உடன் நரிமேட்டை சார்ந்த கோவிந்தராஜ் என்பவரும் டிராக்டரில் இருந்தார். குட்டி கவுண்டனூர் பிரிவு ரோடு அருகே உள்ள தாபா ஓட்டல் அருகே வந்த போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த  கோவிந்தராஜை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து காவேரிப் பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News