உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடந்தது.

7 கோவில்களில் கும்பாபிஷேகம்

Published On 2022-03-22 12:34 IST   |   Update On 2022-03-22 12:34:00 IST
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள 7 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள
அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில்
கும்பாபிஷேகம் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது.
 
இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 19-ம் தேதி விக்னேஸ்வர
பூஜையுடன் தொடங்கபெற்று வருகிறது. விழாவின் முக்கிய
நிகழ்ச்சிகளில் ஒன்றான உப கோயில்கள் கும்பாபிஷேகம்
நேற்று நடைபெற்றது.

திருக்கடையூர் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில்
அமைந்துள்ள சக்தி விநாயகர்,  கற்பக விநாயகர், வெள்ளை
வாரண விநாயகர், அமிர்த ரட்ச விநாயகர்,  சித்தி விநாயகர்,
திருக்கடையூர் எல்லை தெய்வமான பிடாரி அம்மன் கோவில்
மற்றும் எதிர்காலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில்
கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

யாகசாலை அமைக்கப்பட்டு  பூஜிக்கப்பட்ட புனித நீர்
ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் கலசங்களுக்கு ஊற்றி
கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தி.மு.க பொதுக்குழு
உறுப்பினர் அமிர்தவிஜயகுமார், ஒன்றியக்குழு துணைத் தலைவர்
மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ்
மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News