உள்ளூர் செய்திகள்
உருளையன் பேட்டை சங்கோதியம்மன் நகரில் நீர் திருவிழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
இவ்விழாவில் கவுண்டன் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், ஊர் பெரியோர்களும், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து நீர் குடத்தை ஏந்தி மறைமலையடிகள் சாலை வழியாக செங்குந்தர் வீதி, சங்கோதி அம்மன் நகரில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு நேரு எம்.எல்.ஏ. நீ குடத்தை பெற்று அப்பகுதி மக்களிடம் நீர் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
இந்த விழாவுக்கு புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியூ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் தலைமை தாங்கினார். நீர் குடம் வீதி வீதியாக வரும்போது அப்பகுதியில் மேளதாளம், சிலம்பம், ஒயிலாட்டம் நடத்தி வரவேற்றனர். குளங்கள் காப்போம் குழு தலைவர் கார்த்திகேயன், தினேஷ், சூர்யா குழுவினர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சங்கோதி அம்மன் நகரை சேர்ந்த மணவாளன், அய்யனார் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்க உறுப்பினர்கள் செல்வம், பாக்கியராஜ், செழியன், அமிர்தலிங்கம், கந்தசாமி, அருணாச்சலம், அலாவுதீன், பிரபஞ்சன், சூசை, சுரேஷ்,இஸ்மாயில் அப்துல்பாபு, பாலு, வீரா, ராகுல், மற்றும் பலர் செய்திருந்தனர்.