உள்ளூர் செய்திகள்
ஊராட்சி பள்ளியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
வெள்ளப்பள்ளம் ஊராட்சி பள்ளியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் தலைமையாசிரியர் ஹேமலதா தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த் மற்றும் ஆசிரியர் வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு பற்றி ஆசிரியர் இளங்கோ, ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த், தலைமை ஆசிரியர் ஹேமலதா, ஆசிரியர் வேலுமணி பேசினர்.பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சீர்காழி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் தலைமையாசிரியர் ஹேமலதா தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த் மற்றும் ஆசிரியர் வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு பற்றி ஆசிரியர் இளங்கோ, ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த், தலைமை ஆசிரியர் ஹேமலதா, ஆசிரியர் வேலுமணி பேசினர்.பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.