உள்ளூர் செய்திகள்
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் கைதான வாசுதேவன்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2022-03-21 15:31 IST   |   Update On 2022-03-21 15:31:00 IST
சீர்காழி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடைபெற்று வந்தது. இதுதொடர்பான தொடர் புகாரின் பேரில் சீர்காழி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் அடுதாராணி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

விசாரணையில் அவர் சீர்காழி திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (வயது 22) என்பதும் அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து வாசுதேவனை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் திருடி மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டு வாசுதேவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News