உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவரது மனைவி கிருஷ்ணவேணி. திருமணமாகி 3வருடம் ஆன நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 19ந்தேதி அன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு நடந்தது.
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக கிருஷ்ணவேணி உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.