உள்ளூர் செய்திகள்
.

புகையிலை, மதுபாட்டில்கள் கடத்திய லாரி டிரைவர் கைது

Published On 2022-03-21 15:22 IST   |   Update On 2022-03-21 15:22:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகையிலை-மதுபாட் டில்களை கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த  வழியாக வந்த சரக்கு லாரியை சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபாட்டில்கள் இருப்பதும் தெரியவந்தது.

அதில் இருந்த 33 கிலோ புகையிலை பொருட்கள் ரூ.41 ஆயிரம் மதிப்பு இருக்கும் எனவு-ம், 4 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். புகையிலை மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் லாரி என மொத்தம் ரூ.4.45 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர்.

இந்த லாரியை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுககாடு பகுதியை சேர்ந்த அஜித் (வயது27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கடத்தி சென்ற போது சிக்கியுள்ளனர்.

Similar News