உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் பழைய இரும்பு கடையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றன
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது62). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த காதர்பாஷா, மாணிக்பாஷா ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கடையில் வைத்திருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ காப்பர், 45 ஆயிரம் மதிப்புள்ள பைக் ஆகியவைகளை காதர்பாஷா, மாணிக்பாஷா ஆகியோர் திருடிவிட்டு சென்று விட்டனர். இதன் மதிப்புள
இது குறித்து ஆறுமுகம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் காதர்பாஷா, மாணிக்பாஷா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.