உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மாத உதவி ரூ.1500 வழங்கும் திட்டம்-அன்பழகன் வலியுறுத்தல்

Published On 2022-03-21 14:29 IST   |   Update On 2022-03-21 14:29:00 IST
ஜெயலலிதா பெயரில் குடும்ப தலைவிகளுக்கு மாத உதவி ரூ.1500 வழங்கும் திட்டத்தை புதுவையில் தொடங்க வேண்டும் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் ஒட்டு மொத்தம் உள்ள 3 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 430 குடும்பத்தினர் அரசின் மாத உதவி தொகையை திட்டங்கள் மூலம் பெறுகின்றனர். 

இந்த குடும்பங்கள் போக மீதம் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் குடும்பத்தினருக்கு எவ்வித மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதில்லை. 

இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள சுமார் 1 லட்சம் குடும்பத்தினரை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.1500 அரசு வழங்க வேண்டும்.

ஜெயலலிதா பெயரில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மாதம் ரூ.15 கோடி அளவில் ஆண்டுக்கு ரூ.180 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். 

குடும்பத் தலைவிகளுக்கு உதவி புரியும்  மகத்தான திட்டத்தை இந்தியாவிற்கே முன்மாதிரியாக நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டு அமுலுக்கு கொண்டு வர வேண்டும். 

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

Similar News