உள்ளூர் செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

ஊழல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்- அன்புமணி அறிக்கை

Published On 2022-03-21 06:12 GMT   |   Update On 2022-03-21 06:12 GMT
ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ந்தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பதவி உயர்வுக்காக அவர் 35 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. இவர் 2019-ம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்தபோது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது.

ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News