உள்ளூர் செய்திகள்
கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2022-03-21 08:16 IST   |   Update On 2022-03-21 08:16:00 IST
திருநள்ளாறில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு நெய்வாச்சேரி தோட்டக்கார தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 21). இவருக்கும், 14 வயது சிறுமிக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த சிறுமி கடைக்கு வேலைக்கு சென்று வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

திருநள்ளாறு நகர் பகுதியில் வந்தபோது, அந்த சிறுமியை நந்தகுமார் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கு அவரது நண்பர் பெரியார்நகரை சேர்ந்த ராம்குமார் (20) உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக 2 பேரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நந்தகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த ராம்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்சோ வழக்கில் விரைவாக செயல்பட்ட திருநள்ளாறு போலீசாரை காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Similar News