உள்ளூர் செய்திகள்
இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

போலீசார் திடீர் வாகன சோதனை

Published On 2022-03-20 05:02 GMT   |   Update On 2022-03-20 05:02 GMT
புதுவை மதகடிப்பட்டு எல்லையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி:


திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார்  புதுவை மதகடிப்பட்டு எல்லையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழகப்பகுதியில் இருந்து வந்த 2 சக்கர வாகனங்கள்  மற்றும் கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

இதில் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதித்தனர். மேலும் போக்கு வரத்து விதிகளை மீறி 2 சக்கர வாகனத்தில் வந்தவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த திடீர் வாகன  சோதனை இரவு 10 மணிவரை நீடித்தது. 

Tags:    

Similar News