உள்ளூர் செய்திகள்
தில்லைகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தில்லைகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-03-19 15:32 IST   |   Update On 2022-03-19 15:32:00 IST
செம்பனார்கோவில் அருகே தில்லைகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

செம்பனார்கோயில் அருகே நடுக்கரை ஊராட்சி கீழப்பாதி கிராமத்தில் உள்ள தில்லைகாளியம்மன் கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. 

முன்னதாக பூர்வாங்க பூஜைகள், அனுக்ஞை பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

கணபதி பிரார்த்தனை, கங்கா பூஜை, சூரிய பூஜை, மகா பூர்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்களை, வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்தனர். 

அங்கு வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் தில்லை காளியம்மன் மற்றும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப் பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், துணைத் தலைவர் மகாலெட்சுமி சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News