உள்ளூர் செய்திகள்
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
சீர்காழி நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையர் இப்ராஹிம் உத்தரவின்பேரில் சோதனை நடத்தப்பட்டது.
மேலாளர் காதர்கான், கணக்கர் சார்லஸ், வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ், இளநிலை உதவியாளர் பாபு, வருவாய் உதவியாளர்கள் ரவி, முருகானந்தம், பணி மேற்பார்வையாளர் வீரப்பன் ஆகியோர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது வாடகை செலுத்தாத 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.