உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி - நாளை நடக்கிறது
இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். பங்கேற்போர் அனைவருக்கும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் தனியார் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3வது ஆண்டாக மராத்தான் போட்டி வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
8 வயது முதல் 10, 12, 14 வயது வரை என 4 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர், 8 கிலோ மீட்டர், 12 கிலோமீட்டர் என போட்டி நடக்கிறது. 20-ந்தேதி முத்தூர் சுபஸ்ரீ மஹாலில் இருந்து அதிகாலை 4 மணி முதல் போட்டி தொடங்கப்படும்.
இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். பங்கேற்போர் அனைவருக்கும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். முன்பதிவு செய்ய www.mgwtrust.in என்ற தளத்தை அணுகலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.