உள்ளூர் செய்திகள்
நூலகத்தை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நாகை மாவட்ட போலீசார் சார்பில் நூலகம் திறப்பு

Published On 2022-03-19 09:14 GMT   |   Update On 2022-03-19 09:14 GMT
நாகை மாவட்ட போலீசார் சார்பில் நூலகம் திறக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட காவல்துறையின் சார்பில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மத்திய மண்டல 
ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி நூலகத்தை திறந்து வைத்தார். மத்திய மண்டலத்தில் முதன்முறையாக நாகை மாவட்ட ஆயுதப்படையில் தான் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேலும் கிராமப்புற குழந்தைகள் கல்வியறிவில் சிறந்த நிலையை அடைய இது போன்ற நூலகங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News