உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காசு வைத்து சூதாடிய 10 பேர் கைது

Published On 2022-03-19 13:50 IST   |   Update On 2022-03-19 13:50:00 IST
மடுகரையில் காசு வைத்து சூதாடிய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே மடுகரை எஸ்.ஆர்.எம். நகர். புது ஏரிக்கரை பகுதியில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக மடுகரை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். 

விசாரணையில் அவர்கள் மடுகரை இந்திரா நகரை  சேர்ந்த முருகன் (40) சரவணன் (42)  அய்யப்பன் (37), மடுகரை ஈ.எஸ். நகரை சேர்ந்த பிரகாஷ் (55) வடிவேல் (43), சத்திய மூர்த்தி(34), குமார் (59), குணசேகரன் (50), மொளப்பாக்கத்தை சேர்ந்த ஜெயபால் (48), மடுகரை எம்.ஆர்.எஸ். நகரை சேர்ந்த ரமேஷ் (48) என்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணம் 2 ஆயிரத்து 200 மற்றும் சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.    

Similar News