உள்ளூர் செய்திகள்
சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்த காட்சி.

எம்.ஐ.டி. கல்லூரி மாணவி சாதனை

Published On 2022-03-19 09:39 IST   |   Update On 2022-03-19 09:39:00 IST
கணித பொறியியல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவி ஜோதிகா சர்.சிவி.ராமனின் உருவப்படத்தை உருவாக்கி சாதனை படைத்தார்.
புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் விழிகள் கல்வி, பசுமை அறக்கட்டளை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. 

இதில் அக்கல்லூரியில் கணித  பொறியியல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவி ஜோதிகா சர்.சிவி.ராமனின் உருவப்படத்தை அறிவியல் சூத்திரங்களை கொண்டு 50--க்கு 80 அடி உயரத்திற்கு உருவாக்கி சாதனை படைத்தார். இதனை அங்கீகரித்த கலாம் உலக சாதனை நிறுவனம் மாணவி ஜோதிகாவுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.

சாதனை படைத்த கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா கல்லூரியில் நடந்தது. கல்லூரி தலைவரும், நிர்வாக இயக் குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

சிறப்பு விருந்தினர்களாக மூத்த சுற்றுச்சூழல் பொறி யாளர் ரமேஷ், அறக்கட்டளை நிர்வாகி பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர். 

கல்லூரி முதல்வர் மலர்கண், துறை தலைவர்கள் ராஜாராம், பாரி செல்வன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் விஜயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News