உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம்
ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி வெற்றி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஸ்ரீ வெற்றி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திரத்திருவிழா ஆண்டு தோறும் நடை பெறுவது வழக்கம்.
குப்பகுடி ஸ்ரீ வெற்றி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8 தேதி கொடியேற்றி காப்பு கட்டுதலுடன்தொடங்கியது. நேற்று தேர்திருவிழா நடை பெற்றது. பக்தர்கள் தேர்வடம்பிடித்து உற்சாகத்துடன் தேரை 4 வீதிகளிலும் இழுத்துவந்தனர்.
கூடிநின்ற பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அரகரர் கோஷத்துடன் தேர் நிலைக்கு வந்தது பின்னர் உற்சவ தேரில் இருந்து இறக்கப்பட்டு கோவில் மூல ஸ்தானத்திற்கு கொண்டு வரப்பட்டது
சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் காட்சியளிக்கும் மூலவர் வெற்றி ஆண்ட வருக்கு அபிஷேகஆராதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சாமி பிரசாதம் வழங்கப் பட்டது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.