உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மணவாளக்குறிச்சி அருகே அரசு ஊழியர் பரிதாப சாவு

Published On 2022-03-18 09:26 GMT   |   Update On 2022-03-18 09:26 GMT
மணவாளக்குறிச்சி அருகே அரசு ஊழியர் பரிதாபக இறந்தார்.
கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் சாத்தன்விளை என்ற இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 57) ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் கம்பவுண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று கோபால கிருஷ்ணன் வயிற்று வலியால் வாந்தி எடுத்து அவதிப்பட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து கோபால கிருஷ்ணன் மகன் சதீஷ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News