உள்ளூர் செய்திகள்
எஸ்.பி.யிடம் மனு கொடுக்க வந்த வாலிபர்.

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடத்தை மீட்டுத்தர வேண்டும்

Published On 2022-03-17 15:08 IST   |   Update On 2022-03-17 15:08:00 IST
தரங்கம்பாடி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடத்தை மீட்டுத்தர வேண்டும் என எஸ்.பி.யிடம் வாலிபர் புகார் மனு அளித்தார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வதிஸ்டாச்சேரி பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் ஷாஜகான் என்பவர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது தாய்மாமன் அகமது என்பவரது இடத்தை நான் பராமரித்து வந்ததேன். மாமா அகமது ஊருக்கு வந்து அந்த இடத்திற்கு ரூ.5 லட்சம் விலை பேசி ரூ.1 லட்சத்தை வாங்கிகொண்டு ஊருக்குச் சென்றார்.

மீண்டும் வரும்போது பாக்கித் தொகையை கொடுத்துவிட்டு பதிவு செய்வதாகக் கூறி பத்திரம் எழுதி கையொப்பம் இட்டு கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். 

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த முத்தவள்ளி மகன் ஜர்ஜிஸ், சேத்து மரைக்காயர் மகன் சபீர், மேலும் 2 பேர் சேர்ந்து ஷாஜகான் வாங்கிய இடத்திற்குச் சென்று அந்த இடத்தில் வேலி அமைக்க கம்பிவேலிகளை இறக்கியுள்ளனர். அங்கே இருந்த மரங்களையும் வெட்டி உள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் தன்னை அடைத்து வைத்து வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அந்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Similar News