உள்ளூர் செய்திகள்
கோ பூஜை நடந்தது.

சட்டைநாதர் கோவிலில் கோ பூஜை

Published On 2022-03-17 09:35 GMT   |   Update On 2022-03-17 09:35 GMT
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. 
இக்கோவிலில் மலையின் மீதும் தோணியப்பர்-உமாமகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமி அருள் பாலிக்கின்றனர்.

இங்கு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கொடிமரம் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Tags:    

Similar News