உள்ளூர் செய்திகள்
கோ பூஜை நடந்தது.

சட்டைநாதர் கோவிலில் கோ பூஜை

Published On 2022-03-17 15:05 IST   |   Update On 2022-03-17 15:05:00 IST
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. 
இக்கோவிலில் மலையின் மீதும் தோணியப்பர்-உமாமகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமி அருள் பாலிக்கின்றனர்.

இங்கு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கொடிமரம் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Similar News