உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் கொரோனா தொற்று இல்லை

Published On 2022-03-17 14:18 IST   |   Update On 2022-03-17 14:18:00 IST
புதுவையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் 410 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. புதுவையில் ஒருவர் சிகிச்சையில் குணமடைந்தார். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 766 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 790 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர்.  

இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Similar News