உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா
புதுவையில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 458 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவை, காரைக்காலில் தலா ஒருவர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்காலில் 3, மாகியில் ஒருவர் என 4 பேர் சிகிச்சை யில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 766 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 789 பேர் சிகிச்சையில் குண மடைந்துள்ளனர்.
புதுவையில் 6, காரைக் காலில் 8, மாகியில் ஒருவர் என 15 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 7 ஆயிரத்து 916 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.