உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-16 12:33 IST   |   Update On 2022-03-16 12:33:00 IST
மயிலாடுதுறையில் காப்பீட்டு நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற 
அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமையில் 
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து 
அரசு துறை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 8 ஆண்டுகளாக பணமில்லா மருத்துவம் என்ற பெயரில் 
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மருத்துவ செலவிற்காக ஓய்வு தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையைவிட 
குறைவான தொகையை மட்டும் காப்பீட்டு நிறுவனம் ஆண்டுதோறும் 
மருத்து தொகையை வழங்கி வருகிறது. இதனால் நாங்கள் 
கையிலிருந்து மீதமுள்ள தொகையை செலுத்தி மருத்துவம் 
பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே காப்பீட்டு நிறுவனம் மருத்துவத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை முழுமையாக மருத்துவத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் மாவட்ட தணிக்கையாளர் தில்லை சிவப்பிரகாசம் 
விளக்கவுரையும், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், 
மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன், வட்டத் தலைவர் 
நமச்சிவாயம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Similar News