வில்லியனூர் அருகே அம்மன் கோவிலில் நகை திருட்டு
சேதராப்பட்டு:
வில்லியனூர் பெரம்பை சாலையில் அரசூர் கிராமத்தில் புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதுபோல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் நிர்வாகிகள் கோவில் கதவை பூட்டி விட்டு செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவு கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் அறங்காவல் நிர்வாகி முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்த போது கோவில் பின் பக்கத்தில் உள்ள இரும்பு கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி நெற்றியில் இருந்த 4 கிராம் போட்டு ஆகியவற்றை திருடி சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.