உள்ளூர் செய்திகள்
பொய்கை மாட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டிய காட்சி.

பொய்கை மாட்டுச் சந்தையில் களைகட்டிய வியாபாரம்

Published On 2022-03-15 09:25 GMT   |   Update On 2022-03-15 09:25 GMT
வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் செயல் படும் வாரச்சந்தையில் மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபலமானது. 

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தினத்தில் நடைபெறும் சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர்.

இங்கு மாடுகள் மட்டுமின்றி கோழி விற்பனையும் காய்கறி, மாடுகளுக்கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடைபெறும்.

பொய்கை சந்தைக்கு நேற்று இரவே வெளியூர்களில் இருந்து ஏராளமான மாடுகளை விவசாயிகள் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கினர். 

இதேபோல அதிகளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தை முழுவதும் இன்று மாடுகள் வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

இதனால் பொய்கை வாரச்சந்தையில் இன்று காலை முதலே வியாபாரம் களைகட்டியது.
Tags:    

Similar News