உள்ளூர் செய்திகள்
மாணவர்களை பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டிய காட்சி.

அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

Published On 2022-03-15 11:46 IST   |   Update On 2022-03-15 11:46:00 IST
அமலோற்பவம் பள்ளி மாணவர்களை பள்ளி முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.
புதுச்சேரி:

விப்ரோ எர்த்தியன் நிறுவனம் மற்றும் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் செயல்வழிக்கற்றல் நிகழ்ச்சியாக பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பில் மக்களி டையே விழிப்புணர்வு ஏற் படுத்தக்கூடிய படைப்புகள் வெளியிடப்பட்டன. இதில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவிகள் திகழ்மதி, அருணாகுமாரி மற்றும் அஷ்விதா ஆகியோரும் மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், பிரித்திகாராஜு, திவ்யஸ்ரீ, ஹரிணி ஆகியோரும் பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பில் ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.
ஆய்வின் அடிப்படையில் சிறந்த படைப்புகளுக்காக புதுவை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 5 சிறந்த படைப்புகளில் ஒன்றாக அமலோற்பவம் பள்ளி ஆரம்பப்பிரிவு மற்றும் உயர்நிலை பிரிவும் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளியின் நிறுவனர், தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டி கவுரவித்தார்.

Similar News