உள்ளூர் செய்திகள்
பனைமரம்

திருபுவனை ஏரிக்கரையில் பனை மரங்களை வெட்டக்கூடாது- கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-03-15 08:33 IST   |   Update On 2022-03-15 08:33:00 IST
திருபுவனை ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களையும், மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் குளங்களையும், நீரோடைகளையும் பாதிக்காத வகையில் 4 வழிச்சாலையை அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி:

புதுச்சேரி - விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியின்போது திருபுவனை ஏரிக்கரையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட உள்ளன. அந்த மரங்களை வெட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் புதுச்சேரி விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் வல்லவனை சந்தித்து பேசினார்கள். அப்போது திருபுவனை ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களையும், மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் குளங்களையும், நீரோடைகளையும் பாதிக்காத வகையில் 4 வழிச்சாலையை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக மனுவும் அளித்தனர்.

இந்த விவகாரம் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் கலந்து பேசி மேற்கண்ட இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.

Similar News