உள்ளூர் செய்திகள்
ஆவின் நிறுவனத்தில் ரூ.65.89 கோடியில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை
மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.65.89 கோடியில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணோலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மதுரை
சென்னை மாதவரத்திற்கு அடித்தபடியாக தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ஆவின் வளா கத்தில் 65.89கோடிரூபாய் மதிப்பில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளொன்றுக்கு 30ஆயிரம் லிட்டர் வரை ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யஇயலும்.
மதுரை புதிய ஆவின் தொழிற்சாலையை முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கோ.தளபதி, மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மதுரை ஆவின் மேலாண் இயக்குநர் சாந்தி, கே.கே.நகர் பகுதி செயலாளர் அக்ரி.கணேசன், ஆவின் தொ.மு.ச. மாவட்ட தலைவர் முருகன் உள்படபலர் கலந்து கொண்டனர்.
மதுரை புதிய ஆவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஆவின் ஐஸ்கிரீம், முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று மதுரை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.