உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகநல உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகநல உறுப்பினர்கள் நியமிக்க படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை:
2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்களை நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பவதாவது:-
இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூகநல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மன நல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்தும் மாவட்ட இணையதளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம் (https://vellore.nic.in) தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த வடிவத்தில் செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர் 632 001 தொலைபேசி எண்: 0416-2222310, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மேற் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.
இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.