உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர்:
கொரோனா வைரஸ் தொற்றுகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக அமைகிறது. அதனால் அரசின் சார்பில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதாக போட்டுக் கொள்ளும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2&வது தவணை தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
2&ம் தவணை செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.